search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேமுதிக நிர்வாகி"

    • போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    • ஆத்திரமடைந்த ரமேஷ், ஆல்வினை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்ட கடவூர் தே.மு.தி.க தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஆல்வின் (வயது47) முன்னாள் கவுன்சிலரான இவர் நேற்றுமுன் தினம் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கூட்டணி கட்சியான அ.தி.மு.கவை சேர்ந்த மணிகண்டன், ஆல்வினிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த அ.தி.மு.க கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரமேஷிடம் ஆல்வின் கருத்து மோதலில் ஈடுப்பட்டார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், ஆல்வினை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஆல்வின், கரூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக ஆல்வின் அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தே.மு.தி.க ஒன்றிய செயலாள் ஆல்வின் கூறுகையில், கொலை வெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க கவுன்சிலர் ரமேஷை போலீசார் கைது செய்ய வேண்டும். அ.தி.மு.க கவுன்சிலர் ரமேஷை போலீசார் கைது செய்ய வேண்டும். அ.தி.மு.கவினர் கூட்டணி கட்சியனர் என்றும் பாராமல் தேர்தல் முடிந்ததும் தங்கள் வேலையை காட்டி உள்ளனர்.

    இதற்கு அ.தி.மு.க தலைமை பதில் செல்லியே ஆக வேண்டும் என்றார்.

    ×